பேரொளியை நாம் காணப்
பேரார்வம் நீர் தந்தீர்
பாரெங்கும் என் தேடலை
பக்குவமாய் உன்னுள்ளென்று
தீரலாம் உன் தாகமென்று
திசைகாட்டி வழி தந்தீர்
உறவெலாம் உனைச்சார்ந்து
உளம் மகிழ வைத்தீர்
மூச்சின் பலம் என்னவென்று
முகமலர்ந்துரைத்தீர்
பேச்சின் பலம் கொண்டு
பேரார்வம் கொளச் செய்தீர்
அச்சமின்றி அகிலமெல்லாம்
அமைதி பெறச் செய்யும்
உச்சமே உன் சேவை
ஊன்றிட வேண்டுமுலகமெலாம்
ஆசைகள் தானகற்றி
அலையும் நம் புலனடக்கி
ஓசையற்று அமர்ந்துகண்மூடி
உள்ளத்துள் ஒளி தந்தீர்
ஆசிகள் தந்தரவணைத்து
ஆன நற் சேவையிலிருத்தி
தூசல்ல மானுடம் என்றே
தூக்கி நிறுத்தி வைத்தீர்
நீந்தும் நின்காந்த விழிக்குள்
நின்றெனை நிலைக்கச் செய்தீர்
சாந்தமாய் பேசிப் பேசி
சார்ந்தெனை இருக்கச் செய்தீர்
வந்தோம் வாழ்ந்தோமென்பதல்ல
வாழ்க்கை என்றே வாழ்வில்
நீந்தும் ஆசைக்கடல் நீக்கி
நிம்மதி வழி சொன்னீர்
உலக அமைதி தினமதுவும்
உமக்கென்றே உரித்தாக்கினீர்
கலகமடக்க கனரக ஆயுதம்
கைவசம் தேவையில்லையென்று
உலகவமைதிக்கென நாளும்
உரை நிகழ்த்தும் பேராசானே
நிலையாகும் ஓர்நாள் நின்னாசை
நின் மூச்சின் பலமுணர்ந்து
உலகத்தை நீ அறிய
உனக்கிங்கு புத்தி தேவை
உலகமே உனை அறிய
உனையாளும் சக்தி தேவை
உன்னையே நீ அறிய
உள அமைதி தேவை
உனையாளும் சுவாசம்
உள்ளவரை தானிங்கு உன் வாசம்
இறந்தாலும் என்னிதயம்
ஏன்றுமுனையே பேசும்
இருக்கும்வரை என்னாவில்
இனி அமைதி என்றே கோசம்
பேரார்வம் நீர் தந்தீர்
பாரெங்கும் என் தேடலை
பக்குவமாய் உன்னுள்ளென்று
தீரலாம் உன் தாகமென்று
திசைகாட்டி வழி தந்தீர்
உறவெலாம் உனைச்சார்ந்து
உளம் மகிழ வைத்தீர்
மூச்சின் பலம் என்னவென்று
முகமலர்ந்துரைத்தீர்
பேச்சின் பலம் கொண்டு
பேரார்வம் கொளச் செய்தீர்
அச்சமின்றி அகிலமெல்லாம்
அமைதி பெறச் செய்யும்
உச்சமே உன் சேவை
ஊன்றிட வேண்டுமுலகமெலாம்
ஆசைகள் தானகற்றி
அலையும் நம் புலனடக்கி
ஓசையற்று அமர்ந்துகண்மூடி
உள்ளத்துள் ஒளி தந்தீர்
ஆசிகள் தந்தரவணைத்து
ஆன நற் சேவையிலிருத்தி
தூசல்ல மானுடம் என்றே
தூக்கி நிறுத்தி வைத்தீர்
நீந்தும் நின்காந்த விழிக்குள்
நின்றெனை நிலைக்கச் செய்தீர்
சாந்தமாய் பேசிப் பேசி
சார்ந்தெனை இருக்கச் செய்தீர்
வந்தோம் வாழ்ந்தோமென்பதல்ல
வாழ்க்கை என்றே வாழ்வில்
நீந்தும் ஆசைக்கடல் நீக்கி
நிம்மதி வழி சொன்னீர்
உலக அமைதி தினமதுவும்
உமக்கென்றே உரித்தாக்கினீர்
கலகமடக்க கனரக ஆயுதம்
கைவசம் தேவையில்லையென்று
உலகவமைதிக்கென நாளும்
உரை நிகழ்த்தும் பேராசானே
நிலையாகும் ஓர்நாள் நின்னாசை
நின் மூச்சின் பலமுணர்ந்து
உலகத்தை நீ அறிய
உனக்கிங்கு புத்தி தேவை
உலகமே உனை அறிய
உனையாளும் சக்தி தேவை
உன்னையே நீ அறிய
உள அமைதி தேவை
உனையாளும் சுவாசம்
உள்ளவரை தானிங்கு உன் வாசம்
இறந்தாலும் என்னிதயம்
ஏன்றுமுனையே பேசும்
இருக்கும்வரை என்னாவில்
இனி அமைதி என்றே கோசம்