Breaking News

இன்று 10-12-2014 பிரேம் ராவட் அவர்களின் பிறந்த தின விழா கல்லடி ஆனந்த சாலையில் விமர்சையாக கொண்டாடப்படது /// தன்னார்வ தொண்டர் தின இலவச மருத்துவ முகாம் மட்டக்களப்பு தாந்தா மலையில் /// புதிதாக ஞானவழிமுறை பெறுபவர்களுக்கான ஞானவழிமுறை வழங்கும் நிகழ்ச்சி 20-12-2014 , 21-12-2014 ம்திகதிகளில் கல்முனையில்

Wednesday, December 10, 2014

பேரொளியை நாம் காணப் பேரார்வம் நீர் தந்தீர்



பேரொளியை நாம் காணப்
பேரார்வம் நீர் தந்தீர்
பாரெங்கும் என் தேடலை
பக்குவமாய் உன்னுள்ளென்று
தீரலாம் உன் தாகமென்று
திசைகாட்டி வழி தந்தீர்
உறவெலாம் உனைச்சார்ந்து
உளம் மகிழ வைத்தீர்
மூச்சின் பலம் என்னவென்று
முகமலர்ந்துரைத்தீர்
பேச்சின் பலம் கொண்டு
பேரார்வம் கொளச் செய்தீர்
அச்சமின்றி அகிலமெல்லாம்
அமைதி பெறச் செய்யும்
உச்சமே உன் சேவை
ஊன்றிட வேண்டுமுலகமெலாம்
ஆசைகள் தானகற்றி
அலையும் நம் புலனடக்கி
ஓசையற்று அமர்ந்துகண்மூடி
உள்ளத்துள் ஒளி தந்தீர்
ஆசிகள் தந்தரவணைத்து
ஆன நற் சேவையிலிருத்தி
தூசல்ல மானுடம் என்றே
தூக்கி நிறுத்தி வைத்தீர்
நீந்தும் நின்காந்த விழிக்குள்
நின்றெனை நிலைக்கச் செய்தீர்
சாந்தமாய் பேசிப் பேசி
சார்ந்தெனை இருக்கச் செய்தீர்
வந்தோம் வாழ்ந்தோமென்பதல்ல
வாழ்க்கை என்றே வாழ்வில்
நீந்தும் ஆசைக்கடல் நீக்கி
நிம்மதி வழி சொன்னீர்
உலக அமைதி தினமதுவும்
உமக்கென்றே உரித்தாக்கினீர்
கலகமடக்க கனரக ஆயுதம்
கைவசம் தேவையில்லையென்று
உலகவமைதிக்கென நாளும்
உரை நிகழ்த்தும் பேராசானே
நிலையாகும் ஓர்நாள் நின்னாசை
நின் மூச்சின் பலமுணர்ந்து
உலகத்தை நீ அறிய
உனக்கிங்கு புத்தி தேவை
உலகமே உனை அறிய
உனையாளும் சக்தி தேவை
உன்னையே நீ அறிய
உள அமைதி தேவை
உனையாளும் சுவாசம்
உள்ளவரை தானிங்கு உன் வாசம்
இறந்தாலும் என்னிதயம்
ஏன்றுமுனையே பேசும்
இருக்கும்வரை என்னாவில்
இனி அமைதி என்றே கோசம்